Advertise

Featured Post 5

தயவு செய்து இதை வாசிச்சுடாதீங்க .....

Written By mayuran on Monday, April 16, 2012 | 8:43 AM





கடவுள் பெயரை எப்படியெல்லாம் துஸ்பிரயோகம் செய்யலாம் ...லேட்டஸ்ட்  டெக்னிக் ....


அதிசயம் ஆனால் உண்மை.
பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணி அம்மனின் கலியுக மகிமைக் கட்சிகள்.

பரம பக்தர்களே!
ஆனைமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவிலில் ஒரு அற்புதம் நடந்தது. ஒரு நாள் பூசாரி பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒரு பாம்பு வந்தது. அதை கண்டு பூசாரி பயப்பட்டார். அது ஒரு பிராமண அவதாரம் எடுத்து தர்மத்தை யார் கெடுக்கிறார்களோ அவர்களை அழிப்பேன். யாரவது என்னுடைய பெயரில் 1000 போஸ்ட்,ஷேர்  தமது பேஸ் பூக்கில்  வெளியிடுகிறார்களோ அவர்கள் நினைத்ததை 22 நாட்களில் தீர்த்து வைப்பேன். ஆனால் போஸ்ட் செய்வதை  இன்று நாளை என கழித்தால் அதிக கஷ்டத்தை கொடுப்பேன் என்று அந்த நாகதேவதை விஷயத்தை கூறி பின்புறமாக 2 அடி தூரம் கடந்து மாயமாக மறைந்தது.

இந்த விஷயத்தை கேட்டு சங்கராபுரத்தில் ஒருவர் 1500 போஸ்ட்,ஷேர்  செய்ததால்  லாட்டரி சீட்டில் 60 லட்சம் பரிசு கிடைத்தது(அட்ரஸ் கேட்டால் ரத்தம் கக்கி சாகவேண்டி வரும் ). விழுப்புரத்தில் ஒருவர் 877 போஸ்ட்  அச்சிட்டு வெளியிட்டதால் 21 நாட்களில் தங்க புதையல் கிடைத்தது. இதைபோல் ஒருவர் போஸ்ட்  வெளியிடலாம் என நினைத்தபோது அவருக்கு அரசாங்க வேலைக்கு ஆர்டர் வந்தது. பிறகு அவர் 100 போஸ்ட்  வெளியிட்டால். ஆனால் அதை படித்த ஒருவர் பொய் என்று கேலி செய்து போஸ்டை போடவில்லை . அதனால் அவருடைய மகன் இறந்துவிட்டார்.

கள்ளக்குறிச்சியில் பாபு என்பவர் போஸ்டை  படித்துவிட்டு ஒரு மாதம் காலம் லைக் பண்ணாமல்  தாமதம் ஆனதால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் அடைந்தார். பிறகு அவருடைய மனைவி மரணமடைந்தார். மேலும் புதூர் என்ற ஊரில் நான்கு நபர்கள் சேர்ந்து 2500 போஸ்ட் வெளியிட்டார்கள் . அவர்களுக்கு லாட்டரியில் ரூ.4 லட்சம் கிடைத்தது. இந்த விஷயத்தை கேட்ட மளிகைக்கடைக்காரர் 1500  போஸ்ட்,ஷேர்  வெளியிட்டார்  அவருக்கு லாட்டரியில் ரூ.4 லட்சம் கிடைத்தது. பிறகு அங்காளம்மன் கோவிலை கட்டினார்.

இதை  15 நாட்களுக்குள் ஷேர் பணினலோ  லைக் பண்ணினலோ நினைத்த காரியம் நடக்கும். இதை வாசித்த பிறகு பிறருக்கு ஷேர் பண்ணுங்கள் . அருள்மிகு மாசாணி அம்மன் தவறாமல் அவருடைய மகிமையை காட்டுவார். விரைவில்  பேஸ்  புக் இன் சொந்தக்காரர் இதை வெளியிடுவதாக  கூறி உள்ளார் ..பில்லேடன்  கூட இதை வெளியிட தவறியதால் தான் அவருக்கு மரணம் நிகழ்ந்தது இந்தோனேசிய  ஜனாதுபதி இதை கேலி செய்ததால்தான்  சுனாமி ஏற்பட்டது என்றால் பாத்துக்கொள்ளுங்கள் ...எங்கே விரைந்து செயற்படுங்கள் ...

0 comments:

Post a Comment