ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இந்தவருடம் ஜூலை 27 இல் லண்டனில் ஆரம்பிக்கின்றது என்பதை அறிந்திருப்பீர்கள் யாவரும் இதற்காக காத்திருக்கிறார்கள் ஒலிம்பிக் விளையாட்டின் காரணமாக லண்டன் பாரிய நன்மையை அடைய இருக்கின்றது ஒலிம்பிக் விளையாட்டைக்காண்பதற்காக உலகெங்கிலும் இருந்து 4 பில்லியன் வரையிலான மக்கள் லண்டனை நோக்கி படையெடுப்பார்கள் என்று நம்பப்படுகின்றது
இதைப்பற்றிய சில சுவாரசியமான விடயங்கள் இதோ ....
இதன் கட்டுமானப்பணிகள் மே 2008 இல் தொடங்கப்பட்டு 29 மார்ச் 2011 இல் கட்டி முடிக்கப்பட்டது
இதன் உயரம் 60 மீட்டர் (197 அடி ) இதன் சுற்றளவு 860 மீட்டர் (2821 அடி )
இதனுள் முழுமையாக 800 000 டன் மண்ணை நிரப்பலாம்
இதன் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 5250
உடைமாற்றும் அறை,மலசலகூடம் என்பன உட்டபட மொத்தமாக 700 அறைகள் இதில் உள்ளன

மின் இணைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கேபிளின் நீளம் 338 km
இந்த ஸ்டேடியத்தில் ஒரே தடவையில் 80 000 நபர்கள் இருந்து விளையாட்டை ரசிக்க முடியும்
2009 இல் இருந்து 2012 வரை 30 000 புதிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன ஒலிம்பிக் நடைபெறும் நேரத்தில் 70 000 இற்கு மேற்பட்ட வர்த்தக ஒப்ந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது

ஒலிம்பிக் ,அதன் மூலம் ஏற்படும் வேலைவாய்ப்புகள் வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவற்றால் லண்டனின் பொருளாதாரம் 78 .6 பில்லியன் டாலர்களால் அதிகரிக்கும் இதனால் 2020 இல் உலகின் பொருளாதார ரீதியில் 4 பெரிய நகரமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இது லண்டனுக்கு மூன்றாவது ஒலிம்பிக் ஆகும் இதற்கு முன்னராக 1908 ,1948 இல் லண்டனில் ஒலிம்பிக் நடைபெற்றது
0 comments:
Post a Comment