Advertise

Featured Post 5

யாழ்ப்பாண இராஜ்ஜியம்-03

Written By mayuran on Saturday, March 24, 2012 | 1:29 AM

[இதன் முன்னைய பகுதிக்கு செல்லயாழ்ப்பாண இராஜ்ஜியம்-02]
யாழ்ப்பாண இராஜ்யத்தை கிபி 13  ஆம்   நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுவதாலும், மகாவம்சம் சிங்கள  தேசத்தின் வரலாற்றை மட்டுமே கூறுவதாலும், யாழ்ப்பாண வைபவமாலை கிபி 18  ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாலும்  பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்கள் மறைக்கப்பட்டு   அல்லது மறைந்து போனதனாலும் போதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறாமையாலும் நாங்கள் யாழ்ப்பாண இராஜ்யத்தின் தோற்றக் காலத்தையும் தமிழர் ஆட்சியின் தோற்றத்தையும் சிறிது பார்க்க வேண்டி உள்ளது.
      
இராவணன் 
                                                     இராவணன் 
வீணை கொடியை தன் கொடியாக கொண்ட  இராவணன் என்பவனை போதிய ஆதாரங்கள் மூலம் அறிய முடியாவிட்டாலும் இராமாயணம் மற்றும் தேவாரங்களில் இருந்தும் சில சிங்கள நூல்களில்  இருந்தும்  அறியலாம்[இராமாயணம் என்பது ஆரியர்களால் இயற்றப்பட்ட இதிகாசம் என்பதாலேயே ஒரு தமிழ் மன்னன் ஒரு கொடுரனாகவும் அரக்கனாகவும் காட்டப்படுகிறான் என்பதும் கருதப்படவேண்டிய வாதங்கள் ]. "இராவணன் மேலது நீறு........." எனும் தேவார வரியின் மூலமும் இராமாயணத்தில் குறிபிட்டதிலிருந்தும் இவன் ஒரு சிறந்த சிவபக்தனாக இனம் காணப்படுகிறான். மேலும் இசை கலைஞ்சன், சிறந்த மருத்துவன் , நல்ல வீரன் என்றெல்லாம் இனம் காணப்படும் இவனது அரசு இலங்கையில் இலங்காபுரியை தலைநகராய்  கொண்டது என்பது பலரது கருத்து [இராவணனின் இடத்தை இந்தியாவிலும் சிலர் இனம் காண்கின்ற போதிலும் அது இலங்கையிலேயே அமைந்திருந்தது என்பதே திண்ணம் ]. மேலும் இவனை இயக்கர்குலத்தின்  அரசனாகவும் பலர் கருதுவதுடன் நாகர் குலத்திலும் சிலர் இனம் காண்கின்றனர். இவனது குலாம் எதுவாயினும் இவன் புராதன  தமிழ்த்திராவிட இனத்தவன் என்பது  விடிவு. இவன் பல மருத்துவ நூல்களையும் ,இசை நூல்களையும் இயற்றியதாகவும் காணப்படுகிறது. இவனது இராஜ்ஜியம் இலங்கையில் இனம்காணப்பட்டால்  இவனது தலைநகரமான கடல் கொண்ட இலங்காபுரி இலங்கையின் தென்கிழக்கு கரையில் இருந்ததாக கருத இடமுண்டு. இவன் வரலாறு கூறும்  திருகோணமலை, இவன் மாமனாரான மயனால் புனரமைக்கப்பட்டதாக     சொல்லும் திருகேதீஸ்வரம், சீதையை சிறை வைத்ததாக கருதும்        சீதாஎலிய போன்ற பல இடங்கள் இலங்கையில் இருக்கின்றன என்பது பலரின் வாதம்.எது எவ்வாறாயினும் இராவணன் என்னும் தமிழ் மன்னனே இலங்கையில் பெயர் தெரியகூடிய வரையில் விஜயனுக்கு முந்திய இலங்கையின் முதலான தமிழ் மன்னன் என்று கூறலாம்.    
                            சீதாஎலியவில் காணப்படும் சீதை அம்மன் கோவில்
           
 இராவணனுக்கு பின்னர் அவனது தம்பியான விபீடணன் இலங்கையை ஆண்டான் என்று தெரிகின்ற போதிலும் அதற்கடுத்து அரசாண்டவர்கள் யாரென்று தெரிய போதிய ஆதாரங்கள் இல்லை.  
                              நிற்க; பொதுவாக இதிகாசங்கள் எல்லாம் வடஇந்தியாவை சார்ந்த ஆரியர்களாலேயே இயற்றப் பட்டது எனவே அவர்கள் தமிழ் மரபினரை குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் காட்டினர்  என்பது பலரது கருத்திட் கொள்ளப்படும் வாதம். கிரேக்கரும் மற்றும்  ரோமரும் ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்ற முற்பட்டபோது  அவர்களுக்கு எதிராக பெரும் சவாலாக விளங்கிய பழம்குடி இனத்தவர்களை காட்டுமிராண்டி எனும் பொருள் படும் வகையில் கெல்டிக் என அழைத்தது போலவே ஆரியர்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய தமிழ் குடிகளை அவர்கள் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைத்தனர்.  மேலும் பழம் திராவிடக் குடியினர்களில் ஒருவகையினர் எருதுகளை வேட்டையாடி அவற்றின்  கொம்புகளை தலையில்  தம் பாதுகாப்பிற்காக அணிந்திருந்தனர் என தேவநேயப்பாவாணர் குறிபிடுகின்றார். ஒரு வேளை அப்படி இலங்கையை சேர்ந்த பூர்வ திராவிட குடிகள் வசித்திருந்தால் அவர்களை உண்மை அறியாத பிறநாட்டவர்கள் பார்க்கும் அக்கொம்புகள்   அவர்களுடன் இயற்கையில் அமைந்தது எனக்கருதி அவர்களை மனிதர்களில் இருந்து பிரித்து இனம் கண்டிருக்கலாம் என்பது எனது கருத்து.
                  இதில் மேலும் தெரிவிக்க வேண்டிய விடயம் என்னவெனில்   இராமாயணம் பற்றி  எதிர் கருத்துகள் பல இருந்தாலும் இலங்கை எனும் தீவில் விஜயன் வர முன்னமே மன்னர் ஆட்சி உண்டென்றும் அவ்வாறு இருந்த தமிழ் மன்னர் மரபின் அரசனாக இராவணன் இனம் காணப் படுகிறான் என்பதும் ஏற்புடையதே என்பதே ஆகும்.
                                       திருகோணமலையிலுள்ள   இராவணன் சிலை          

மேலும் காண்போம் வரும் பதிப்புக்களில்............... 
                        இங்கு என்கருத்தாக  தெரிவித்த கருத்துக்கள் வேறு யாராலும் குறிப்பிடப்பட்டதா என்பது தெரியவில்லை. பிழைகளை தெரிவிப்பதுடன் உங்கள்  கருத்துக்களை பகிருங்கள்.
 {இதன்  அடுத்த  பதிபிட்க்கு  யாழ்ப்பாண இராஜ்ஜியம்-04

0 comments:

Post a Comment