இணையத்தை சகலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் தற்பொழுது 18 வயதுக்கு குறைந்தவர்களும் இணையத்தில் வலம் வர ஆரம்பித்து விட்டார்கள் இவர்கள் இணையங்களுக்கு புதியவர்கள் எனவே இணையத்தில் எதிர் நோக்க வேண்டியிருக்கும் பிரச்சனைகளுக்கு பெற்றோர்தான் கூடிய அளவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது
குழந்தைகளின் இணையப்பாவனை தொடர்பான புள்ளிவிபரங்கள் இதோ
5 % மான பெற்றோர்களுக்கு தமது குழந்தைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்று புரிவதில்லை17 % ஆன குழந்தைகள் தமது பெற்றோருக்கு நாம் இணையத்தில் என்ன செய்கின்றோம் என்பது விளங்குவதில்லை என்று நம்புகிறார்கள்
73 % ஆன பெற்றோர் இணையத்தை பயன்படுத்துவதற்கு தமது குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்
இணையத்தை பயன்படுத்தும் 10 இல் ஒரு சிறுவன் வயது வந்தோருக்கான தளத்தை பார்வையிடுகின்றான்
குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்குவதற்கு இணையம் உதவினாலும் வன்முறைகள் ,தேவையற்ற கலந்துரையாடல்கள்
ஆபசத்தளங்கள் போன்றவற்றிற்கு சென்றுவிடக்கூடாது என்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் ..ஆனால் எந்நேரமும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை அவதானித்துக்கொண்டிருக்க முடியாது எனவே அவர்களின் பாதுகாப்பான இணைய பாவனைக்கு குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உலாவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதன் பெயர் kidzui
இத்தளத்தை உருவாக்கியவர்கள் பல மில்லியன் கணக்கான வீடியோக்கள் தகவல்கள் படங்கள் போன்றவற்றை பலமுறை சோதனை செய்து பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இதில் இணைத்திருக்கிறார்கள் அத்துடன் இதில் குழந்தைகளுக்கான பல விளையாட்டுக்களும் உள்ளன ..பெற்றோரால் இணைய உலாவுதலைக் கட்டுப்படுத்தக்கூடிய parental controls இருக்கின்றது இதனை நிறுவிக்கொண்டால் குழந்தைகள் இவ்வுலாவியை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக செய்துவிடலாம் ..இதை தரவிறக்கம் செய்ய click
0 comments:
Post a Comment